அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 17, 2008

தியாகத்திற்கு நேர்ந்த துரோகம் - மக்கள்குரல்

தியாகத்திற்கு நேர்ந்த துரோகம்


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

- குறள் (388) அதிகாரம்-39.

என்ற வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப,

வயதில்,அறிவில்,முதியோர்-ஊரின்
வாய்மைப் போருக் கென்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை!
ஓங்கும் அமரர் இரா.விஸ்சுவநாதன்

இவர் தான் எமது கிராமத்தின் மாபெரும் தலைவர்,சட்டம் பயிலாத சட்ட மேதை,நீதி மன்றம் போகாது நீதியை காத்த நீதி அரசர்,ஊருக்கே உழைத்த உத்தமர்,தன் வாழ்க்கை பேனாதா தியாக செம்மல்.இவர் வாழ்ந்த காலத்தை சொன்னால் பதினைந்து ஆண்டுக்கு மேல் கணக்கு பணியாளராகவும்,மேலும் இருபது ஆண்டுக்கு மேல் ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்ப்பட்டு வரலாற்று பாத்திரதில் கால் பதித்தவர் எமது அய்யா விஸ்சுவநாதன் அவர்கள்.

இந்த மகாத்மா அன்று செய்த முயற்சியும் செயல்பாடும் தான் இன்றைக்கு காசாங்காடு கிராமத்தைப் பற்றி நாடு எங்கிலும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது பெருமைக்கு உரிய ஒன்று. இவர் ஆற்றிய தொண்டு,வழங்கிய நீதி எமது கிராமத்திற்கு மட்டும் அல்லாமல் சுற்றுப் பட்ட கிராமத்திற்கும் செய்து உள்ளார்,அதனால் இது நாள் வரையிலும் சுற்றி உள்ள கிராமங்களில் இவருக்கென்று தனிப் பெருமையும் புகழும் உண்டு என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படி செய்ய வேண்டும் என்பதை தனிச்சையாக முடிவு செய்யாமல் அனைவர்களின் கருதுகளை எடுதுக்கொண்டு அதற்கு ஏற்றார் போலும் செயல்பாட்டிற்றிக்கு தகுந்தார் போலும் நீதியையும் பணிகளையும் ஆற்றி வந்தார்.இவர் ஆற்றிய பணிகளை பட்டியியல் இட்டு பார்த்தால் ஒரு சகாப்த்தம் படைத்து விடலாம் என்பது உண்மை.இன்றைக்கு எத்தனையோ செய்திகளை பெருமைக்குரிய செய்திகளாக குரிப்பிட்டு காட்டி உள்ளோம் அத்தனையும் இவர் கண்ட கனவு எடுத்த முயற்சிகள் பொக்கிசமாய் காக்கப் பட்டு வருகிறது.

அப்படி பட்ட மாமனிதனுக்கு ஒரு துரோகம் இழைக்கப்பட்டதை அறிந்தவர்கள் இன்று வரையிலும் மறக்க இயாலது என்பது உண்மை.அறியாதோர் இது நாள் வ்ரையிலும் எவரும் ஆராய்ந்து பார்க்கவில்லை அதனால் பொய்கள் மறைக்கப்பட்டு விட்டது.அன்று அவரின் மேல் சுமத்தப் பட்ட ஒரு குற்றசாட்டு அவரை மரண ஏக்கத்திற்கு கொண்டு சென்று விட்டது.

பல தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கிய அவருக்கு நீதி சொல்ல எவருமே இல்லை என்பதனால் அவர் எம்மையெல்லாம் ஏங்க வைத்து விட்டு சென்று விட்டார். ஆகையால் அவர் செய்த தியாகத்திற்கு இப்படிப் பட்ட துரோகம் இழைக்கப்பட்டதே அவர் மரணத்திற்கு காரணமாயிற்று.

பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்து தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

- குறள்(45)- அதிகாரம் 45.

இந்த குறளடிக்கு ஏற்ப இவரை கைநழுவ விட்டு விட்டோம் என்பது மனதை காயப்படுத்தும் செய்தியாகும்

கருத்துகள் இல்லை: