அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அய்யனார் திருக்கோவில் விக்ருதி வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்

கிராம மக்களுக்கு இணைய குழுவின் பாரம்பரிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2010  புதன்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.


அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.


நிகழ்ச்சி நிரல்:


விக்ரதி சித்திரை மாதம்  1,  14/04/2010 புதன்கிழமை:


காலை 9 மணி:
        சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெறும்.
மாலை 5 மணி அளவில்:
       காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
       சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.


இரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.


விக்ரதி சித்திரை மாதம்  2,  14/04/2010 வியாழக்கிழமை:


15/04/2010 வியாழக்கிழமை அர்ச்சனை அபிஷேகம் நடைபெறும்.


இரவில் பொழுதுபோக்கிற்காக புதிய திரைப்படம் காண்பிக்கப்படும்.


இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

கருத்துகள் இல்லை: