அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், மே 27, 2010

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா

அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா விக்ருதி வருடம் வைகாசித் திங்கள் 13 ஆம் நாள் (27/05/2010) சிறப்பாக
நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிநிரல்:

வைகாசி 11 (25/05/2010) முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்

வைகாசி 12 (26/05/2010) முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல் (இரவு திரைப்படம் காண்பிக்கப்படும்)

வைகாசி 13 (27/05/2010) மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல் மற்றும் பாலாபிஷேகம் இரவு அம்மன் வீதியுலா-முதற்சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி-தப்பாட்டம்)

வைகாசி 14 (28/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் வீதியுலா-இரண்டாம் சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி- தப்பாட்டம்)

வைகாசி 15 (29/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் (இரவு இன்னிசைக்கச்சேரி நிகழ்ச்சி)

வைகாசி 16 (30/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை (இரவு நடன-நாட்டிய நிகழ்ச்சி)

வைகாசி 18 (01/06/2010) விடையலாற்றி உற்சவர் சாமி உள்ளே எடுத்துவைத்தல்

முத்துமாரிஅம்மன் வெளியில் எடுத்தது முதல் விடையலாற்றி உள் எடுத்து வைக்கும் வரை ஒவ்வொரு நாள் இரவும் 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு.முத்துமாரிஅம்மனின் ஆசி பெற்றுச்செல்ல அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இங்ஙனம்,
அறங்காவலர்கள் மற்றும் கிராமவாசிகள்,
காசாங்காடு.

தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

கருத்துகள் இல்லை: