அருள்மிகு.முத்துமாரியம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா விக்ருதி வருடம் வைகாசித் திங்கள் 13 ஆம் நாள் (27/05/2010) சிறப்பாக
நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிநிரல்:
வைகாசி 11 (25/05/2010) முத்துமாரிஅம்மனுக்கு பூச்சொரிதல் மற்றும் உற்சவர் சாமி வெளியில் எடுத்துவைத்தல்
வைகாசி 12 (26/05/2010) முத்துமாரிஅம்மன் அன்னவாகனத்தில் மன்னங்காடு செல்லுதல் (இரவு திரைப்படம் காண்பிக்கப்படும்)
வைகாசி 13 (27/05/2010) மதியம் முத்துமாரிஅம்மன் மன்னங்காட்டிலிருந்து திரும்புதல், மாலை அம்மனுக்கு பால் காவடி, பால்குடம் எடுத்தல் மற்றும் பாலாபிஷேகம் இரவு அம்மன் வீதியுலா-முதற்சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி-தப்பாட்டம்)
வைகாசி 14 (28/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் வீதியுலா-இரண்டாம் சுற்று (கிராமியக்கலை நிகழ்ச்சி- தப்பாட்டம்)
வைகாசி 15 (29/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் முத்துப்பல்லக்கில் எழுந்தருளல் (இரவு இன்னிசைக்கச்சேரி நிகழ்ச்சி)
வைகாசி 16 (30/05/2010) இரவு முத்துமாரிஅம்மன் தெப்பதில் எழுந்தருளல் மற்றும் வானவேடிக்கை (இரவு நடன-நாட்டிய நிகழ்ச்சி)
வைகாசி 18 (01/06/2010) விடையலாற்றி உற்சவர் சாமி உள்ளே எடுத்துவைத்தல்
முத்துமாரிஅம்மன் வெளியில் எடுத்தது முதல் விடையலாற்றி உள் எடுத்து வைக்கும் வரை ஒவ்வொரு நாள் இரவும் 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறும்.
பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு.முத்துமாரிஅம்மனின் ஆசி பெற்றுச்செல்ல அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
இங்ஙனம்,
அறங்காவலர்கள் மற்றும் கிராமவாசிகள்,
காசாங்காடு.
தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக