அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, பிப்ரவரி 20, 2011

தகவல் உரிமை சட்டம் - கிராமத்தானின் நிலைமை


எங்கள் நாட்டிலும் தகவல் உரிமை சட்டம் உள்ளது என்று தோள் தட்டி கொள்ளும் இந்தியாவின் தகவல் உரிமை சட்டத்தின் உண்மையான நிலவரம் என்ன என்பதை ஒரு கிராமத்தானின் பார்வையில் பார்போம்.

கிராமத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், அரசாங்கம் அளிக்கும் சலுகைகள், கிராம வரவு செலவு கணக்குகள், உள் கட்டமைப்பு, கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கணக்குகளும், செய்த பணிகளின் புகைப்படங்களும் பற்றி தெரிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பொது தகவல் அதிகாரியிடம் கேட்டேன்.

மனு அனுப்பிய நாள்: 13 அக்டோபர் 2010
அனுப்பிய மனு: https://docs.google.com/Doc?docid=0Ad79pv5cgYSiZGd6d3BxeHhfMTQzZ3p3OHN0cmo&hl=en
மனுவை தபால் துறை அந்த இல்லாகாவிடம் சேர்த்த விபரம்: 

மாவட்ட ஆட்சியர் பெற்று கொண்ட ஒப்புகை மற்றும் கேட்ட தகவலை அனுப்ப கோரி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) இட்ட ஆணை:
முறையான இந்த மாவட்ட ஆட்சியரின் பதிலுக்கு எமது பணிவான நன்றிகள்.
உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)  ஒப்புகை கடிதமும் காசாங்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு பிறபித்த ஆணையும்:
அவ்வளவு தான் பதிலும் கிடைக்கவில்லை, தகவல் கொடுக்க இயலாமைக்கும் காரணமும் கொடுக்கவில்லை.

காசாங்காடு கிராம ஊராட்சி தலைவர் தகவல் உரிமை சட்டத்தை எவ்வளவு மதிகின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது.

51 நாள் ஆகியும் பதில் கிடைக்காத காரணத்தால் மேல் முறையீடு விண்ணப்பம் மாவட்ட அட்சியகத்திர்க்கு அனுப்பினேன்.

மேல் முறையீட்டு விண்ணப்பம்: https://docs.google.com/document/d/1kffFmQ8EM3E0yDUeLcjRvJ7ffzYHEg8uEn0Mm2P9jGw/edit?hl=en

இன்னும் பதிலுக்காக வழிமேல் விழி வைத்து கத்து கொண்டிருகின்றேன்.

இதுவே தகவல் உரிமை சட்டத்தில் ஒரு இந்திய கிராமத்தானின் நிலைமை.

இதற்க்கு பதில் கிடைக்காததால் மேலும் பல தகவல் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிருக்கும் என நம்புகிறேன்.

இந்த விண்ணப்பத்தில் மேலும் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதன் முடிவு தான் என்ன? என்பதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தாங்களும் எங்கள் கிராமம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனின் எங்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் செய்யுங்கள். தங்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தபடுகின்றதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பத்திரிக்கைகளுக்கு: மேலும் இது சம்பந்தமாக மேலும் தகவல் வேண்டுமெனின் press@kasangadu.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள். 

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/295e46ecc180be15?hl=ta

கருத்துகள் இல்லை: