ஜனநாயகம் பிறப்பது நாடாளுமன்றத்தில் அல்ல, பஞ்சாயத்தில் தான். காசாங்காடு கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்வோம். தகவல்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எமது நன்றி.
முன்னேற்றங்கள்:
- புதிய பள்ளி கட்டிடம்
- இரு புதிய மேல் நிலை நீர்தேக்க தொட்டி
- ஆரம்ப சுகாதார நிலையம்
- வரபோகும் தேர்தலை ஒட்டி கிடைக்க பெற்றது. ஓட்டு வாங்குவதற்கான நாடகமா என்று மக்கள் தான் சொல்ல வேண்டும்.
- மாரியம்மன் கோவில் முன் நாடக மேடை (கிராமத்தினரின் நன்கொடையும் இதில் அடங்கும்)
பராமரிப்புகள்:
- சில தார் சாலைகள் புதுபிக்கபட்டது
- நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்பட்டது.
சங்கடங்கள்:
- கிராமத்தின் நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்து கிராம தலைவர் பதவி நீக்கம் பெற்றது. இந்த நடவடிக்கை பற்றி தெளிவான தகவல்கள் பற்றி கேட்டறியப்படும்.
- தண்ணீர் பட்டுவாடா செய்வதில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்து நாச வேலைகளில் கிராம தலைவர் ஈடுபட்டது.
- தண்ணீர் மேல் எக்கிகளை அனுமதியின்றி பறிமுதல் செய்ததது.
- தண்ணீர் குழாய்களை அறுத்தது.
- போகி பண்டிகை (2011) மற்றும் அதனை தொடரும் பொங்கல் பண்டிகை அன்று சாலைகள் மிகவும் தேவைப்படும் நேரத்தில் சாலைகளை பெயர்த்து காசாங்காடு கிராம மக்களுக்கு மிகுந்த பயண சிரமங்களை உள்ளாக்கியது.
- தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை அதற்குரிய நேரத்தில் தர மறுப்பது. கேட்ட தகவல்கள் இதுவரை ஆறுமாதமாகியும் இன்னும் கிடைத்த பாடில்லை? அரசாங்கம் கிராமத்திற்கு ஒதுக்கிய பணத்தில்/பொருட்களில் ஏதேனும் மோசடியா?
மேற்குறிப்பிட்டுள்ள தகவலில் பிழைகள்/திருத்தங்கள்/சேர்க்கைகள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக