காசாங்காடு பெரமநாத அய்யனார் திருக்கோயில் திருப்பணி தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலத்தெரு, வடக்குத்தெருவைச்சேர்ந்த சில குடும்பத்தினரும் குலதெய்வமாக வழிபடுவதால் அவர்களும் இணைந்து இந்த திருப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாட்டை காசாங்காட்டிற்குள்ளேயே கொண்டு வரும் மேலத்தெரு மற்றும் வடக்குத்தெரு வாசிகளின் முயற்சி வெற்றிபெற கிராமத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற உறுதியை அளித்து வரவேற்போம்.
மேலத்தெரு, வடக்குத்தெரு மக்களால் ஒன்றுகூடி கிராமத்தில் கோவில் எழுப்ப வேண்டுமென முடிவு செய்யபட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இடத்தில் அந்த கோவில் கட்ட உள்ளதாக திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலப்பகுதி மேலத்தெரு சுந்தாம்வீட்டை சேர்ந்ததாகும். கிராமத்தில் சாலை வசதிக்காக இந்த நிலபகுதி துண்டுபட்டது. அதன் பின்னர் பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த பகுதி தற்போது அந்த இடத்தில் கோவில் எழுப்ப பயன்படுகிறது.
இந்த கோவில் கருப்பூராம் வீட்டை சேர்ந்த திரு. திருநாவுக்கரசு தலைமையில் கட்ட திட்டமிடபட்டுள்ளது.
கிராமத்தில் ஒரு நல்ல தேவைக்காக அந்த இடத்தை வழங்கிய குடும்பத்தினர்களுக்கு இணைய குழுவின் சார்பில் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக