அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

வியாழன், ஏப்ரல் 12, 2012

அய்யனார் திருக்கோவில் நந்தன வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்


கிராம மக்களுக்கு இணைய குழுவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அருள்மிகு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பால் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் திருக்கோவில் சித்திரை வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்
காசாங்காடு மன்னங்காடு ரெகுநாதபுரம்

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 13/04/2012 வெள்ளிகிழமை பூராட நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
நந்தன சித்திரை மாதம் 1, 13/04/2012 வெள்ளிகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

பால் குடம் எடுப்பதற்கு 100 ரூபாய் வசூல் செய்யப்படும்.
வசூல் செய்யப்படும் தொகைக்கு பின்வரும் சேவை மற்றும் பொருட்கள் வழங்கப்படும்.
மாலை 
இலை
சூடம்
சாம்பிராணி
மஞ்சள் துணி
வாழைப்பழம்
மேளம், தாரை, தப்பட்டை விளம்பரகார்

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.

கருத்துகள் இல்லை: