அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

திங்கள், ஏப்ரல் 14, 2014

அய்யனார் திருக்கோவில் ஜெய வருடபிறப்பு திருவிழா அழைப்பிதழ்




ஆன்மீக அன்பர்களே வணக்கம்,

நிகழும் மங்களகரமான ஜெய வருடம் சித்திரை மாதம் 1 தேதி, 14/04/2014 ஞாயிற்றுகிழமை சதுர்த்தி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக ஆரதனை உள்ளது.

அது சமயம் பக்த கோடிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பூர்னாம்பாள் ஸ்ரீ புஷ்கலாம்பாள் உடனுறையும் ஸ்ரீ மெயக்கமுடைய அய்யனார் சுவாமி அருள்பெற வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்:
ஜெய சித்திரை மாதம் 1, 14/04/2014 ஞாயிற்றுகிழமை:

காலை 9 மணி:
சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

மாலை 5 மணி அளவில்:
காவடி, பால்குடம், மாவிளக்கு அர்ச்சனைகள் நடைபெறும்.
இரவு 9 மணி:
சிறப்பு ஆராதனை பிரசாதம் வழங்குதல்.

இங்ஙனம்,
கிராமவாசிகள்
காசாங்காடு, மன்னங்காடு, ரெகுநாதபுரம்


கிராமத்தில் ஆன்மீக உணர்வை வளர்க்கும் நாட்டண்மைகளுக்கு இணைய குழுவின் நன்றிகள்.