அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, மே 29, 2011

காசாங்காடு கிராம வானிலை - இன்று முதல் ஆரம்பம்


காசாங்காடு கிராம வானிலை இன்று திறக்கபடுகிறது. இதன் மூலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் காசாங்காடு கிராம மக்கள் காசாங்காடு கிராமத்தின் வானிலை அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவிலே ஒரு கிராமம் அதன் வட்டத்தில் தினசரி வானிலை பெறுவது இதுவே முதல் முறை.

இதன் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் வானிலை அளவுகள்,
  1. வெப்பம்
  2. காற்றின் ஈரப்பதம்
  3. காற்றழுத்தம்
மேலும் தினசரி அதிகபட்ச/குறைந்தபட்ச அளவுகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்வரும் சுட்டிகளில் இந்த தகவலை காணலாம்.

http://www.kasangadu.com -  கடைசியாக பெறப்பட்ட வானிலை நிலவர சுருக்கம்.
http://weather.kasangadu.com -  இதுவரை பெறப்பட்ட வானிலை வரலாறு, மற்றும் காசாங்காடு கிராம வானிலை சம்பந்தமான தகவல்கள்.

தகவல்களை பதிய உதவி புரிந்த அனைத்து வல்லுனர்களுக்கும்,  உரிய தொழில் நுட்பங்களை தந்த கூகிள் நிறுவனத்திற்கும் எமது நன்றிகள்.

கிராம மக்களுக்கு இந்த தகவல் பயனுள்ள வகையில் அமையுமென நம்புகிறோம்.


சனி, மே 21, 2011

கிராமத்தில் இடியுடன் கூடிய சிறுதூறல்


வெள்ளிகிழமை இரவு அன்று இடியுடன் கூடிய சிறுதூறல் கூடிய வானிலை நிலவியது. இதன் தாக்கமாக நடுத்தெரு ஆட்டுகாரன்வீடு திரு. அருணாசலம் வீட்டில் இருந்த ஒரு தென்னை மரத்தில் இடி விழுந்தது. சில தொலைகாட்சி பெட்டிகள், மின்னணு சாதனங்கள் சேதத்திற்கு உள்ளாகின.

இது பற்றி மேலும் தகவல் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளுங்கள்.


வியாழன், மே 19, 2011

மாரியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக கொண்டாட திட்டம்


கடந்த இரண்டு வாரமாக கிராம மக்களால் ஒன்று கூடி (ஊர் கூட்டம்)  இந்த வருடம் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்சிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏதோ கடமைக்கு திருவிழா நடந்தது போல் இருந்ததை கவனத்தில் கொண்டு கிராம மக்களின் ஆண்மிக உணர்வை மேம்படுத்தும் வகையில் இந்த வருடம் சிறப்பாக அமைய திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சம்:
தேர் இழுத்து செல்லும் நிகழ்ச்சி, இரவு நேரங்களில் இல்லாமல் பகலில் நடத்தப்படும்.

இதற்காக ஆகும் செலவுகளை மாரியம்மன் கோவிலில் கிடைத்த உண்டியல் நிதி தொகை கொண்டும், வெளிநாட்டு வாழ் காசாங்காடு கிராம மக்களின் பங்கும் இதில் பெருமளவில் அமையும்.

இது பற்றி விரிவான தகவல்கள் தாங்களுக்கு தெரியுமெனின் பகிர்ந்து கொள்ளவும்.

கிராமத்தில் ஆண்மிக உணர்வை மேம்படுத்த உதவி புரியும் நல்ல உள்ளங்களுக்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.