இப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
முத்தமிழ் மன்றம் பகிர்ந்து கொண்ட காணும் பொங்கல் விளையாட்டு விழா வரவு செலவு கணக்கு விபரங்கள். கிராமத்தினரின் பங்கும் கிடைத்த பணத்தையும் பொறுப்புடன் செலவு செய்த விதமும் உலகிற்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கில், மற்றும் மன்றத்தின் நேர்மையும் விளக்கும் விதத்தில் இந்த தவகல் அமையும்.
தகவல் தவறாக இருப்பினும் இணைய குழுவிடம் / மன்றத்திடம் பகிர்ந்து கொள்ளவும்.
கிராமத்தில் கிராம பஞ்சாயத்து நடாத்தும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நேற்றிளிரிந்து நடைபெறுகின்றது.
இது சம்பந்தமான நிழற்படங்கள் / நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகளுடன் சிறப்புற முடிந்தது.
தெளிவான நிழற்படங்கள், நிகழ்படங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மதுக்கூர் ஒன்றியம் காசாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை
திட்டத்தின் சார்பில் விவேகானந்தர் ஜயந்தி விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர்
கு. பாண்டியன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு விவேகானந்தர் குறித்த
பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளியின் பசுமைப்படை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. மணி
செய்திருந்தார்.
Arise ! Awake ! Stop not till the goal is reached ! - Swami Vivekananda