சமீபத்தில் மதுக்கூர் ஊராட்சிய ஒன்றியத்தின் காசாங்காடு ஊராட்சி அறிவிப்பை பார்த்தோம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தங்களுடைய தனி நபர் குடிநீர் இணைப்பில் சட்டத்திற்கு புறம்பாக நீரினை மோட்டார் வைத்து உறுஞ்சுவது, ஹோஸ் பைப் வைத்து மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது, தோட்டம் வளர்ப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் உங்களது இணைப்பு முன்னறிவிப்பின்றி துண்டிக்கப்படும் என் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
ஏனெனில் வருகின்ற கோடை காலத்தில் குடிநீர் பற்றாகுறை, அதிகரிக்கின்ற சூழ்நிலை இருப்பதால், இந்த அறிவிப்பு கிடைத்த மூன்று நாட்களில் மேற்குறிய செயல்களை நிறுத்த வேண்டும் என் கேட்டு கொள்கிறோம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அறிவிப்பை கண்டதும் பெருமைபட்டேன். எனது கிராமத்தில் இவ்வாறு முறைப்படி நடவடிக்கை எடுக்கபடுகிறதே என்று.
அறிவித்தது ஒன்று, செய்வது ஒன்று.
அநாகரிக செயல்களில் ஈடுபட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நாகரிகமாக கூறிவிட்டு அநாகரிக செயல்களில் ஈடுபடுகிறது காசாங்காடு கிராம ஊராட்சி நிர்வாகம்.
இன்று கிராமத்தில் மோட்டார் வைத்து உறுஞ்சும் இணைப்புகளில் உள்ள மொடோர்களை கிராம மக்கள் பிரதிநிதி திரு. சிதம்பரம் மற்றும் கிராமத்திலிருந்து அவரது தோழர்கள் அல்லது வேலை செய்யும் வேலை ஆட்கள் நேரில் சென்று மொட்டோர்களை உரிமையாளர்களின் அனுமதி இல்லமால் அவர்கள் வசிக்கும் பகுதி புகுந்து மொட்டோர்களை பறிமுதல் செய்துள்ளார். குழாய்களை அறுத்து விட்டுள்ளனர்.
யார் இவருக்கோ அல்லது இவ்வாறு செய்பவர்களுக்கு இந்த உரிமைகளை கொடுத்தது? குடிநீர் இணைப்பை தவறாக பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டியது தானே நியாயம்? மேலும் இவ்வாறு செய்வதால் கிராமத்திற்கு ஏற்பட்ட இழப்பினை அல்லது சேதத்தை முறைப்படி அபராதம் பெற வேண்டியது தானே.
கோவிலில் ஆடுகளை பலியிட்ட ஒருவருக்கு அபராதம் வாங்க தெரிந்த கிராமத்திற்கு, கிராம குடிநீர் இணைப்பு தவறாக பயன்படுத்தியவர்களுக்கு வாங்க முடியவில்லையா? இதற்காக ஊர் கூட்டம் போடவில்லையா? அல்லது பஞ்சாயத்திற்கு யாரும் வரவில்லையா?
தண்ணீர் குழாய் இணைப்பு கொடுத்துவிட்டதால் மக்களின் சொத்துக்களில் எப்படி வேண்டுமானாலும் சேதம் விளைவிக்கலாமா?
மக்கள் வசிக்கும் பகுதி புகுந்து, சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஒருவர் இப்படி அநாகரீக செயல்களில் ஈடுபட்டால் மக்கள் என்ன செய்வது?
ஒரு மக்கள் பிரதிநிதியின் அநாகரிக செயல்களால் பல இந்திய குடிமகனின் அமைதியான வாழ்வு காசாங்காடு கிராமத்தில் சீற்குலைகப்படுகின்றது.
அடுத்த முறை ஓட்டு கேட்டு இந்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருவாரா? அல்லது இதோடு தம்மால் முடிந்தவரை சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மேலும் மக்களை துன்பத்தில் ஈடுபடுத்துவாரா?
திரு. சிதம்பரம் அவர்கள் அரசாங்கத்தால் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குருபிடத்தக்கது. அதை பற்றிய தகவல் இங்கே.
http://news.kasangadu.com/2008/09/blog-post_7664.html
மக்கள் தான் இதற்கான பதிலை கிராம நிர்வாகத்திற்கும், ஒன்றியத்திற்கும் கூற வேண்டும்.
தகவல் உதவி: வருத்தத்துடன் காசாங்காடு கிராம குடிமகன்
பிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்
7 ஆண்டுகள் முன்பு