அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

ஞாயிறு, நவம்பர் 27, 2011

ராஜகோபால் செந்தாமரை அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழ்



திருமண தேதி மற்றும் நேரம்: Nov 27 2011 , 10:00 மேல் 12:30 க்குள்
திருமணம் நடக்கும் இடம்: கோமள விலாஸ் ராசு திருமண மஹால், பட்டுக்கோட்டை

மணமகன் பெயர்: செல்வன். செந்தில்குமார்
மணமகன் வீட்டின் பெயர்: அமுநியாம்வீடு, கீழத்தெரு
மணமகன் பெற்றோர் பெயர்: திரு. ராஜகோபால் (Auditor) & திருமதி. செந்தாமரை
மணமகன் தொழில் விபரம்: B.Com

மணமகள் பெயர்: செல்வி. சாந்தி
மணமகள் ஊரின் பெயர்: ஆத்திக்கோட்டை
மணமகள் பெற்றோர் பெயர்: திரு. தனசேகரன் & திருமதி. திருச்செல்வி
மணமகள் தொழில் விபரம்: B.Pharm

திருமண அரசாங்க பரிவர்த்தனைகள்:

http://government.kasangadu.com/parivartainaikal/tirumanam

முசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய:

http://matrimony.musugundan.com

மணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.


வெள்ளி, நவம்பர் 18, 2011

புதிய ஊராட்சி மன்றம் செயல்படுத்த ஏதுவான திட்டங்கள்


காசாங்காடு உறவுகளே !
முதலில் இணய தளம் மூலமாக நல்ல பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!  வாழ்த்துக்கள் !!!

வரும் 27.11.11   அன்று, நம் ஊரில் புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை  அடையாளம் காண,  இளைஞர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

வெளி நாட்டில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவும் தமிழகத்தில் உள்ளோர் மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

மூன்று வகை திட்டங்களகப் பிரித்துக் கொள்ளலாம்:
1. உடனடி
2. குறுங்கால
3. நீண்ட கால

அடுத்ததாக:
1. ஊருக்கு வருவாய் தரக் கூடியவை
2. மக்கள் நலம் காக்க
3. மக்களுக்கு வருவாய் தரக்கூடியவை

அன்புடன்,
க.மா.வெ நடராசன் (சென்னை)
கருப்பாயி வீடு


தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.)


பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் பிறகு வெளியிடப்படும். தங்களின் கருத்துக்களை குழுமத்தில் http://groups.google.com/group/kasangaducom  அல்லது காசாங்காடு கிராம நிர்வாகத்திடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மன்னங்காடு இணைய தளத்தில் அய்யனார் கோவில் மகாகும்பாபிஷேகம் பற்றிய தகவல் ...



மன்னங்காடு இணைய தளத்தில் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் பற்றி ...
தகவல் உதவி: http://www.mannankadu.org/temples/ayyanar

ஸ்ரீ மெய்க்கமுடைய அய்யனார் கோயில் 
குடமுழுக்கு விழா
கர ஆண்டு ஐப்பசி மாதம் ௨௮ (28ம் நாள்), நவம்பர் 14, 2011
Sri Meikkamudaiya Iyyanar Koil Consecration on November 14, 2011 after an extensive renovation by the villagers of
Kasangadu, Mannankadu and Regunathapuram


காசாங்காடு, மன்னங்காடு, இரெகுநாதபுரம்
திருப்பணிக் குழுவினரும், கிராமத்தினரும் இணைந்து நடத்திய
ஸ்ரீ மெய்க்கமுடைய அய்யனார் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

இக்கோயிலின் முதன்மைக் கடவுள் மெய்க்கமுடைய ஐய்யனார், துணைவியர் பூர்ணாம்பிகா மற்றும் புஷ்களாம்பிகா ஆகியோர்
The prime deity Meikkamudaiya Ayyanaar with consorts, Sri Poornambika and Sri Pushkalambika,
in the sanctum sanctorum of the temple

நெடுஞ்சாலையிலிருந்து கோயிலுக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ள நுழைவாயில்
Temple's main entrance arch at the highway junction

கோயில் பசுமையான சோலையால் சூழப்பட்டுள்ளது
The temple is located in the meadows in the midst of rich vegetation

குடமுழுக்குக்குச் சற்றுமுன், கோயிலின் பின்புறத் தோற்றம்
A view from west (behind the temple) as the priests perform pre-consecration rituals 

கோயிலின் வடபுறத் தோற்றம்
A view from the north

வடகிழக்கு மூலையிலிருந்து கோயிலின் கோபுரத் தோற்றம்
A closeup view of the Vimanam from the northeast


மேகமூட்டமான வானின் கீழ் வேதியர் குடமுழுக்காற்றுகின்றனர்
The moment of Consecration, the Kumbabishekam


குடமுழுக்குக்குப் பிந்திய சடங்குகள்
Post-consecration rituals


குடமுழுக்குக்குச் சற்று பின், திருப்பணிக் குழுவினரும் வேதியரும் கீழிறங்குகின்றனர், 
மற்றும் பக்தர், ஆர்வலர் கூட்டத்தில் ஒரு பகுதி
Priests and the organizers descend by make-shift ladder after the Consecration and part of the crowd is in the foreground

குடமுழுக்குக்குப் பின் மூல அறையில் மூலஸ்தான கும்பாபிஷேகச் சடங்குகள் நிகழும் சமயத்தில் கோயிலின் பின்புறம் 
A view from west while the post-consecration rituals proceed in the sanctorum

அர்த்த மண்டபத்திலிருந்து பார்க்கும்போது மூல அறையின் தோற்றம்
A view of sanctorum from hall in the front


பெருமண்டபத்திலிருந்து பார்க்கும்போது மூல அறையின் தூரத்தோற்றம்
A view of sanctorum from Artha Mandapam

முன்புறத்திலிருந்து கோயிலின் தோற்றம். குதிரைகள் முதன்மைக் கடவுளின் வாகனம்
A view from the front yard. Representing the belief - the saddled horses with quivers are for the prime deity


கோவிலை ஒட்டி அமைத்துள்ள கரும்பு வயல்கள்
Lush sugarcane fields in the south of the temple

அழகு நிறைந்த கரும்பின் இலைகள்
Closeup - sugarcanes


  கோயிலுக்குக் கிழக்கில் அமைந்துள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அன்னதானப் பந்தல்
Located in the east is a makeshift Pandal for Annadhanam, to provide free food for the devotees. Kitchen is on the right

'


வியாழன், நவம்பர் 17, 2011

கிராம பஞ்சாயத்து அமைப்பு - நிழற்படம்



பெயர்கள் (இடமிருந்து வலம்):
திரு.கோ.ராஜராஜசோழன்(ஊ.ம.து.தலைவர்),
திரு.சி.அலக்ஸாண்டர்,
திரு.அ.ராமச்சந்திரன்,
திரு. MC என்கிற வீரமுத்து,
திரு.அ.நடராஜன்,
திரு.மு.சதாசிவம் (ஊ.ம.தலைவர்)
திரு.ரா.விவேகானந்தன்,
திருமதி.வைத்திநாதன்,
திருமதி.செந்தாமரை லெனின்,
திருமதி.கோகிலா அசோக்குமார் ஆகியோர் பதவிஏற்பு விழாவில் கலந்துகொண்டபோது எடுத்தபடம்.


ஞாயிறு, நவம்பர் 13, 2011

கிராம நிர்வாக செயல்கள்


கிராமத்தில் தற்போது நடக்கும் நிர்வாக செயல்கள் பற்றி பொது மக்களிடம் கேட்டறிந்தோம்:

  1. பிள்ளையார் கோவில் தெரு மக்களுக்கு குடிநீர் வசதி சரி செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  2. குடி தண்ணீர் வீணாகும் குழாய்கள் சரி செய்யபடுகின்றன.
  3. மின்சார கம்பிகளை தடுக்கும் மர கிளைகள் கிராம முழுவது சரி செய்யபடுகின்றது. இதன் மூலம் மின்சார கசிவு தவிர்க்கப்படும். இதன் மூலம் குறுகிய சுற்று மின் கசிவுகளினால் ஏற்படும் மின் தடை தவிர்க்கபடுகின்றது. அநாவசியமாக மரங்கள் வெட்டபடுவது பற்றிய புகார்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
  4. கிராமம் முழுவதும் மழை தண்ணீர் விரைவாக வடிய, வடிகால்கள் சரி செய்யபடுகின்றது.

எதிர்வரும் செயல்கள்:

  1. அரசு பள்ளிகளுக்கு நிழலில் வாகனங்கள் நிறுத்தும் வசதி. தற்போது வாகனங்கள் திறந்த வெளியிளியே நிறுத்தபடுகின்றது.
  2. குழந்தைகளுக்கு பூங்கா
  3. நூலகத்தில் இணைய வசதி.
  4. நூலகத்தில் கிராமத்தினருக்கு கம்பியில்லா இணைய வசதி. (Free Wi-Fi)
முயற்சி செய்யும் அனைத்து கிராம மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
கிராம மேம்பாட்டிற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

 தகவல்கள் தவறாக / பிழைகள்  இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


காசாங்காடு மெயக்கமுடைய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை 09:00 முதல் 10:30 க்குள் நடைபெற உள்ளது.

பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.  

  

செவ்வாய், நவம்பர் 01, 2011

ஒரு வார காலமாக கடும் மழை


கடந்த ஒரு வார காலமாக கிராமத்தில் கடும் மழை தொடர்கின்றது.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் பற்றிய விபரம் வானிலை இணைய தளத்தில் காணலாம்.

வானிலை இணைய தளம்: http://weather.kasangadu.com/vanilai-viparankal/2011