புதிய ஊராட்சி மன்றம் செயல் படுத்த ஏதுவான திட்டங்களை அடையாளம் காண 27.11.11 அன்று நடைபெற்ற இளைஞர் கலந்துரையாடல் கூட்டம்
அவைக் குறிப்பு
1. கூட்டம் 3.00 மணிக்கு துவங்கி 5.30 மணி வரை நமது மேனிலைப் பள்ளியில் நடை பெற்றது.
2. ஊராட்சி மன்றத் தலைவர் திரு சதாசிவம், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன், மாவட்ட ஊராட்சி
உறுப்பினர் திரு மெய்க்கப்பன் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திரு இராசராச சோழன் உட்பட 25 பேர் கலந்து கொண்டனர்.
3.
அனைவரையும் திரு முத்துசாமி வரவேற்றார். திரு நடராசன் கூட்டத்தின்
நோக்கத்தை விளக்கினார். மேலும் இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை
வாசித்தார்.
4. கூட்டத்தில் கீழ்க் காணும் பொருட்கள் பற்றி விவாதிக்கப்பட்டது:
அ.
திட்டக்குழு அமைத்தல் - நல்ல ஆலோசனையாக ஏற்கப்பட்டது;
குழு அமைப்பு, உறுப்பினர் பெயர் பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
ஆ. நீண்டகாலத் திட்ட வரைவு தயாரித்தல்
திட்ட அறிக்கை தயார்ச செய்து சுற்றுக்குவிடலாம்; அடுத்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யலாம்
இ. அறக்கட்டளை
ஏற்படுத்துதல்
அறக்கட்டளை அமைப்பு, விதிகள் , உறுப்பினர் நிதி பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
ஈ. உழவர் சங்கம் ஏற்படுத்துதல்
ஊராட்சித் தலைவர் உடனடியாக சங்கத்தைபதிவுசெய்ய்ய நடவடிக்கை எடுப்பது;
திரு மாரிமுத்து நாபார்டு வங்கி உதவிக்கு ஏற்பாடு செய்வார்
உ. பாசன விவசா யிகள் சங்கம் ஏற்படுத்துதல்
சங்க அமைப்பு, பதிவு செய்தல் பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம்
ஊ. சில முக்கியத் திட்டங்கள்: (அரசு சார்ந்தவை)
ஊராட்சி மன்ற வளாகத்தில் கொட்டகை அமைத்தல்
- ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் திரு வீரய்யன் நிதிக்கு ஏற்பாடு செய்வார்
ஆரம்ப சுகாதார
நிலையம் அமைத்தல்
- அரசு அனுமதி கிடைத்து பணிகள் துவங்கி விட்டன
நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல்
- அரசு அனுமதிக்கு முயற்சி மேற்கொள்ளுதல்
துணை மின் நிலையம் அமைத்தல்
- அரசு அனுமதிக்கு முயற்சி மேற்கொள்ளுதல்
மண் பரிசோதனை நிலையம் அமைத்தல்
- நடமாடும் நிலையத்தை முதலில் பயன் படுத்தலாம்; பின்னர் நிலையத் தேவை பற்றி ஆலோசிக்கப்படும்
வடகாடு வாய்க்கால் (பெரிய ஆறு) கரையை தார் சாலையாக்குதல்
- அரசு அனுமதிக்கு முயற்சி மேற்கொள்ளுதல்
எ. மற்ற திட்டங்கள்:
வேலை வாய்ப்பு உருவாக்கம்
பெண்களுக்கு உள்ளூரில் வேலை
இளைஞர் தொழிற் பயிற்சி
ஏ. காசாங்காடு ஊராட்சிப் பணிகளை கணனி மயமாக்குதல்
- ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்
ஐ. ஊராட்சி அலுவலகத்திற்கு இணைய இணைப்பு பெறுதல்
- ஊராட்சித் துணைத்தலைவர் திரு இராசராச சோழன் ஏற்பாடு செய்வார்
5.
அடுத்த
கலந்தாய்வுக் கூட்டத்தை ஒரு மாத இடைவெளியில் நடத்துவது என்றும் அடுத்த
கூட்டத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் இளஞர்களைத் திரட்டுவது என்றும்
ஊரின் நீண்ட காலத்திட்டத்தின் முதல் வரைவை தயார் செய்து ஆலொசனை செய்வது
என்றும் முடிவு செய்ய்யப்பட்டது.
தகவல் உதவி: Prof. Dr.V.Natarajan BTech (PSG Tech) MTech (IIT-D)PhD(TUL,Czech Rep.), Chennai