அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

தென்னை மரங்களில் புதிய வியாதி - கிராமம் பாதிப்பு

சில மாதங்காளாக தென்னை மரங்களில் புதிய வியாதியால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடுகிறது. இதனால் தென்னை மகசூல் பெருமளவில் பாதித்துள்ளது.

காசாங்காடு இணைய குழு, விளக்கமான படங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறது. மேலும் தாங்கள் அனுப்பிய விபரங்களுக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது? அல்லது அதற்க்கு தீர்வு இருக்குமாயின் அந்த தகல்வளையும், பதிலில் அனுப்புமாறு அதில் குறிப்பிடவும்.

அனைத்து தேங்காய் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Coconut Development Board,
Kera Bhavan, SRVHS Road, Kochi, Kerala State - 682011, INDIA
http://coconutboard.nic.in/

or

Central Plantation Crops Research Institute,
Kasaragod 671 124, Kerala, India

அனைத்து விவசாய ஆராய்ட்சி மற்றும் விவசாய முறைகள் சம்பந்தமான தகவல்களுக்கும்:

Vice Chancellor
Agricultural College and Research Institute
Tamil Nadu Agricultural University Coimbatore-641003 India

மேலும் இம்முகவரிகள் தகவல் உரிமை சட்டத்தின் இணைய தள, முகவரிகள் பக்கத்தில் குறிப்புக்காக பதிக்கபட்டுள்ளது. http://rti.kasangadu.com/mukkiya-mukavarikal

நன்றி.

செய்தி உதவி: ராஜராஜசோழன், சென்னை

சனி, ஏப்ரல் 25, 2009

கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி


கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சிலம்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

அவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.

நீயா! நானா! பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது! ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை!

ஆனால்...
ஆசிரியன் என்பவன் யார்?
அவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

கற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன?


எதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை! அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...

பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...
இந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...
உங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...
அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது! நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...!?

கோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்!
அதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு!

வியாழன், ஏப்ரல் 16, 2009

தேர்தல் முக்கிய நாட்கள் - 2009

1. அறிவிப்பு வெளியிடப்படும் நாள், சித்திரை 4 (Friday Apr 17, 2009)

2. வேட்பு மணு தாக்க கடைசி நாள், சித்திரை 11 (Friday Apr 24, 2009)

3. வேட்பு மணு பரிசீலனை நாள், சித்திரை 12 (Saturday Apr 25, 2009)

4. வேட்பு மணு விலக கடைசி நாள், சித்திரை 14 (Monday Apr 27, 2009)

5. தேர்தல் நாள், சித்திரை 30 (Wednesday May 13, 2009)

6. வாக்கு எண்ணிக்கை,  வைகாசி 2 (Saturday May 16, 2009)

செவ்வாய், ஏப்ரல் 14, 2009

கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா

கிராமத்தில் இன்று அய்யனார் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

செய்தி உதவி: தமிழ்மாறன், காசாங்காடு

மரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்

மரபு படியான தமிழ் புது வருட வாழ்த்துக்கள்.

நன்றி.

ஞாயிறு, ஏப்ரல் 12, 2009

கிராமத்தில் கன மழை

கிராமத்தில் சில நாட்களாக மழையும், நேற்று இரவு கனத்த மழை.

செய்தி உதவி: செந்தமிழ்செல்வி, காசாங்காடு

திங்கள், ஏப்ரல் 06, 2009

நாடாளுமன்ற தொகுதி மாற்றம்

2009 ஆம் ஆண்டிலிருந்து காசாங்காடு கிராமம் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களிப்பார்கள். இந்த திருத்தத்தை தமிழக தேர்தல் ஆணையம் 2007 ஆம் ஆண்டு செய்தது. இதற்க்கு முன்பு புதுகோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு வாக்களித்தார்கள்.

மேலும் வேட்பாளர்களின் (பாராளுமன்றம் & சட்ட சபை) அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்கள், குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் இருப்பின் அதை பற்றிய விபரங்கள் அனைத்தும் தகவல் உரிமை சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளியிடப்படும்.

நன்றி.

செய்தி உதவி: காஞ்சனா, சென்னை