அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், ஜூன் 24, 2009

தமிழ்நாடு கால் பந்தாட்ட அணியில் இளமுருகன்

காசாங்காடு, நடுத்தெரு, முத்தாம் வீட்டை சேர்ந்த இளமுருகன் (த/பெ மாரிமுத்து) தமிழ்நாடு கால் பந்து அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியன் வங்கியின் ஆட்டக்காராக இடம் பெறுவார்.



கிராமத்தில் இருந்து மாநிலம் மற்றும் தேசிய அளவில் விளையாட்டுகளில் பங்கு பெறுவது கிராமத்தை மேலும் பெருமை அடைய செய்கிறது.

சமீபத்தில் நடந்த சந்தோஷ் பரிசுகோப்பையில் இவர் கலந்து கொண்டு விளையாடியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

இணையத்தில் மேலும் இது சம்பந்தமான 82 சுட்டிகள் இங்கே.

இவரின் பங்கு மேன்மேலும் வெற்றியடைய இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

செய்தி உதவி: அருள்செல்வன், சென்னை

செவ்வாய், ஜூன் 23, 2009

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் நேரில் சந்திப்பு

காசாங்காடு, நடுத்தெரு குட்டச்சி வீட்டை சேர்ந்த தீபக்குமார் தனது தொழில் நுட்ப உதவியை, பொது தொண்டு நிறுவனங்களுக்கு, சமீப காலாமாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் செய்து வந்தார். இதில் ஒரு நிறுவனத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பார்வையிட வரும் பொது அவருடன் கலந்துரையாடும் புகைப்படம்.


இவரின் பணிகள் மேன் மேலும் தொடர இணைய குழுவின் வாழ்த்துக்கள்.

ஞாயிறு, ஜூன் 21, 2009

விருது பெற்ற காசாங்காடு ஊராட்சி மன்ற தலைவருக்கு எமது பாராட்டு

தினமணியில் வெளிவந்த செய்தியின் தொகுப்பு இங்கே.
விருது பெற்ற காசாங்காடு ஊராட்சி மன்ற தலைவருக்கு எமது பாராட்டு


தஞ்சை மாவட்டத்தில் விருது பெற்ற ஊராட்சிகள்

First Published : 19 Jun 2009 10:32:47 AM IST


தஞ்சாவூர், ஜூன் 18: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற ஊராட்சிகள் (அடைப்புக்குறிக்குள்) மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெயர் விவரம் வருமாறு:

தஞ்சாவூர் வட்டாரம் பி. கலைச்செல்வி (பிள்ளையார் நத்தம்), பூதலூர் வட்டாரம் தமிழ்செவ்வி ரஞ்சன் (கடம்பங்குடி), திருவையாறு வட்டாரம் ஷேக் அலாவுதீன் (முகாசாகல்யாணபுரம்), கே. இளவரசி (வடுககுடி), ஒரத்தநாடு வட்டாரம் கை. கோவிந்தராஜன் (அருமுளை), ரமாதேவி அன்புமணி (புலவன்காடு), செல்வி (உரந்தராயன்குடிகாடு), திருவோணம் வட்டாரம் சௌந்தரராஜன் (அம்மங்குடி).

கும்பகோணம் வட்டாரம் தமிழ்செல்வி (கீழபாளையார்), நல்லப்பன் (திருநல்லூர்), ப. ஜெயபால் (உத்தமதாணி), திருவிடைமருதூர் வட்டாரம் ஆர். யசோதா (ஸ்ரீநிவாசநல்லூர்), ஜி. முல்லைவேந்தன் (திருநீலக்குடி), எஸ். விஜயா (ஆண்டலம்பேட்டை), ஆர். கருணாநிதி (மஞ்சமல்லி), திருப்பனந்தாள் வட்டாரம் ஜி. குணசேகரன் (குறிச்சி), ஜி. முருகன் (கஞ்சனூர்).

பாபநாசம் வட்டாரம் என். நாசர் (சக்கராப்பள்ளி), ஆர். வசந்தா (கணபதி அக்ரஹாரம்), து. சௌந்தர்ராஜன் (ராமானுஜம்), அம்மாபேட்டை வட்டாரம் சுப்பிரமணியன் (புலவர் நத்தம்), பட்டுக்கோட்டை வட்டாரம் ஏ. ஜெர்மான்ஸ் (அணைக்காடு), எஸ். ஜெகதீசன் (பொன்னவராயன்பேட்டை), மைக்கேல்சாமி (வீரக்குறிச்சி).

மதுக்கூர் வட்டாரம் வி.ஆர். வீரசுப்ரமணியன் (வேப்பங்குளம்), எஸ். மரகதம் (மதுக்கூர் வடக்கு), கே. மீனாட்சி (வாட்டக்குடி உக்கடை), ப. சிதம்பரம் (காசாங்காடு), ஆர். ராசேந்திரன் (கருப்பூர்), பேராவூரணி வட்டாரம் த. இளங்கோ (வளபிரம்மன்காடு), சேதுபாவாசத்திரம் வட்டாரம் ஏ. சரவணன் (கட்டயங்காடு உக்கடை), வேலுசாமி (வீரய்யன்கோட்டை).
செய்தி உதவி: தினமணி

செவ்வாய், ஜூன் 09, 2009

பழனிவேலு-ஜெயம் அவர்களுக்கு பேத்தி பிறந்துள்ளது


நடுத்தெரு ஆட்டுக்காரன் வீடு,
பழனிவேலு-ஜெயம் மகனான ரெங்கபாஷ்யம் தம்பதினியர்களுக்கு செவ்வாய்கிழமை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

காசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.

செய்தி உதவி: ரெங்கபாஷ்யம், காசாங்காடு

புதன், ஜூன் 03, 2009

காசாங்காடு மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா


காசாங்காடு மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் வெள்ளிகிழமை வைகாசி 22, ஆம் நாள் நடைபெற உள்ளது.




பொது மக்கள் அனைவரும் பங்கு பெற்று சிறபிக்க வேண்டுகிறோம்.

தகவல் உதவி: மாரிமுத்து, காசாங்காடு