அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஏப்ரல் 25, 2009

கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுக்கு எமது நன்றி


கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சிலம்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

அவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.

நீயா! நானா! பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது! ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை!

ஆனால்...
ஆசிரியன் என்பவன் யார்?
அவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

கற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன?


எதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை! அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...

பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...
இந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...
உங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...
அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது! நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...!?

கோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்!
அதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு!

கருத்துகள் இல்லை: