கோபால் ஆசிரியரை நினைவு கூர்ந்த பாரி அரசுவிற்கு (சிலம்பவேளாங்காடு) காசாங்காடு இணைய குழுவின் மனமார்ந்த நன்றிகள்.
அவர் எழுதிய கருத்துக்கள் இதுவே.
ஆனால்...
ஆசிரியன் என்பவன் யார்?
அவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?
கற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன?
எதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை! அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.
உங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...
பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...
இந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...
உங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...
அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது! நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...!?
கோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்!
அதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக