அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

சனி, ஏப்ரல் 17, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா


கிராமத்தில் கடந்த 03 ஏப்ரல் 2010 அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது சமயம் பள்ளி வகுப்புகளில் சிறப்பு இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் "சமூகநீதிகாத்த" தலைவர் மானமிகு.கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கியதோடு மாணவர்கள் எப்படியெல்லாம் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் கல்வி கற்று இச்சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தி வைத்தார்கள். விழாவில் மாணவர்களின் பெற்றோர்,கிராமப்பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திறழாக கலந்து கொண்டார்கள்.

தகவல் உதவி: திரு. சுகுமாரன், துபாய்

கருத்துகள் இல்லை: