கிராமத்தில் தற்போது நடக்கும் நிர்வாக செயல்கள் பற்றி பொது மக்களிடம் கேட்டறிந்தோம்:
- பிள்ளையார் கோவில் தெரு மக்களுக்கு குடிநீர் வசதி சரி செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக இந்த பகுதிக்கு குடி தண்ணீர் வசதி கிடைக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- குடி தண்ணீர் வீணாகும் குழாய்கள் சரி செய்யபடுகின்றன.
- மின்சார கம்பிகளை தடுக்கும் மர கிளைகள் கிராம முழுவது சரி செய்யபடுகின்றது. இதன் மூலம் மின்சார கசிவு தவிர்க்கப்படும். இதன் மூலம் குறுகிய சுற்று மின் கசிவுகளினால் ஏற்படும் மின் தடை தவிர்க்கபடுகின்றது. அநாவசியமாக மரங்கள் வெட்டபடுவது பற்றிய புகார்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளவும்.
- கிராமம் முழுவதும் மழை தண்ணீர் விரைவாக வடிய, வடிகால்கள் சரி செய்யபடுகின்றது.
எதிர்வரும் செயல்கள்:
- அரசு பள்ளிகளுக்கு நிழலில் வாகனங்கள் நிறுத்தும் வசதி. தற்போது வாகனங்கள் திறந்த வெளியிளியே நிறுத்தபடுகின்றது.
- குழந்தைகளுக்கு பூங்கா
- நூலகத்தில் இணைய வசதி.
- நூலகத்தில் கிராமத்தினருக்கு கம்பியில்லா இணைய வசதி. (Free Wi-Fi)
கிராம மேம்பாட்டிற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள்.
தகவல்கள் தவறாக / பிழைகள் இருப்பினும் திருத்தி பகிர்ந்து கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக