அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

தினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)

புதன், டிசம்பர் 10, 2008

முதல் புகார் கடிதம் - கிராமவாசிகள்

புகார் கடிதம்
அனுப்புதல்:
பொதுநலவிரும்பிகள்,
காசாங்காடு கிராமம்,
மதுக்கூர் ஒன்றியம்,
பட்டுக்கோட்டை வட்டம்.
பெறுநர்:
கோட்டாச்சியர் அவர்கள்,
கோட்டாச்சியர் அலுவலகம்,
பட்டுக்கோட்டை.
ஐயா,
பொருள்: மழை நிவாரணம் குறைபாடுகள் பற்றி.

நாங்கள் அனைவரும் காசாங்காடு கிராமத்தில் வசித்து வருகிறேம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்திற்க்காக அரசு நிவாரண நிதி வழங்க உள்ளதை சரியாக கணக்கீடு செய்யாமல் ,மேல் மட்டத்தில் உள்ளவர்களின் பேச்சை கேட்டு கிராமநிர்வாக அலுவலகர் எங்களை போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு ஓட்டு வீடு என்று எழுதி நிதி வழங்க உள்ளார்கள்,ஆனால் எங்களாது குடும்பங்கள் வசிப்பது கூரை வீட்டில் தான்.நாங்கள் இது நாள் வரையிலும் வீட்டு வரி கட்டுவது கூட கூரை வீட்டுக்குதான்.

மேலும் கிரமத்தில் உள்ள அரசியல் குலர்படியின் காரணமக மாடி வீட்டில் இருப்பவருக்கு கூட அவர்களுக்கு உரிமைப்பட்ட கூரை போடப்பட்ட குடிசைகளை வீடு என்று எழுதப்பட்டுள்ளது.இதனை தாங்கள் விசரனைக்கு கொண்டு வந்தால் அனைத்தையும் ஆதாரத்தோடு நிருபணம் செய்ய தயராக உள்ளோம். நாளை(11.12.2008) வெள்ளம் நிவாரண நிதி வழங்க உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்குமுன்னதாக தாங்கள் இதனை விசாரனைக்கு கொண்டு வருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
கிராமநலவிரும்பிகள்,
காசாங்காடு.

செய்தி உதவி: பெயர் வெளியிட விரும்பாத நபர்.
இதன் பதிப்பு மாவட்ட ஆட்சியாளருக்கும், கோட்ட ஆட்சியாளருக்கும் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: