ஒவ்வொரு வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழா நேரத்தில் சாமி தேர் வரும் காரணம் கொண்டு, சாலையோரங்களில் இருக்கும் மரங்கள், செடிகளின் தழைகள் சாலைகளில் விழாமல் கழித்து விடப்படுகின்றது. சாலைகளில் பயணிகள், வாகனங்கள் பயணிக்க இது பேருதவியாய் அமையும். கிராமத்தில் நடக்கும் இந்த துப்புரவு பணிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்த செயல்களை செய்கின்றனர். இதை முன்னிருந்து நடத்தும் பனி கிராமதலைவரையும் போய் சேரும்.
சிலரின் வயித்தெரிச்சலும் இதில் அடங்கும். மிகவும் ஆசையுடனும் விருப்பத்துடனும் வளர்த்த பூ செடிகளை, மரங்களை வேரோடு அழிக்கும் பெருமை இந்த துப்புரவு பணியில் அடங்கும்.
கிராமத்தினை மிகவும் துப்புரவாக வைத்திருக்க உதவி புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது பாராட்டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக