பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் / மாணவிகள் / ஆசிரியர்கள் இன்று காசாங்காடு கிராமத்தை காண வந்தனர். சுமார் 60 நபர்கள் இன்று காசாங்காடு கிராமத்தையும் / கிராம சுகாதாரத்தையும் / கிராம நிர்வாகத்தையும் பற்றி அறிந்து கொள்ள வந்துள்ளனர்.
கல்லூரி பேருந்து மற்றும் Car மூலம் கிராமத்தை வந்தடைந்தனர்.
கிராமத்தில் உள்ள கோவில்கள், பள்ளிகள், மக்களின் வாழ்க்கை தரம், நிர்வாக உட்கட்டமைப்பு போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டனர். இது பற்றிய விரிவான தகவல்கள் நேரடியாக பார்வையாளர்களிடம் இருந்து விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.
இணையத்தின் மூலம் காசாங்காடு கிராமத்தை பற்றி தெரிந்து கொண்டு கிராமத்தை பார்க்க வந்த இந்திய குடிமகன்களுக்கு இணைய குழுவின் நன்றிகள். தாங்களின் வருகையின் மூலம் காசாங்காடு கிராமத்தை மற்றும் இணைய தளத்தை பெருமைபடுத்தியமைக்கு எமது பணிவான நன்றிகள்.
தாங்களின் பயணம் பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என நம்புகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக